எகிப்து நாட்டின் தலைநகரான கெய்ரோ பகுதியில்  ஐந்து அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது. இந்த இடுப்பாடுகளில் சிக்கிய 13 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் மீட்கப்பட்ட நான்கு பேர் தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் 60,000 எகிப்தியன் பவுண்ட் (இந்திய மதிப்பில் 1,59,265) வழங்கப்படும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. முறையற்ற கட்டுமான பணிகளால் அவ்வப்போது எகிப்தில் கட்டடங்கள் இடிவது சாதாரணமாகிவிட்டது.