உயர்கல்வி பயிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ₹1,000 வழங்கும் ‘தமிழ் புதல்வன் திட்டம்’ விரைவில் தொடங்கப்படும் என தஞ்சை பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். 6 முதல் 12ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் பயின்று உயர்கல்வியில் சேரும் மாணவர்கள் தங்களது உயர்கல்வி திறனை மெருகேற்றும் வகையில் ₹1,000 வழங்கப்பட உள்ளது. இந்தத் திட்டத்தை தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.