பாஜகவிற்கு வாக்களித்தால், காஷ்மீரின் நிலை நாளை நமக்கும் வரலாம் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். தஞ்சையில் பேசிய அவர், ‘இந்தியா கூட்டணி அமைய நான் காரணமாக இருந்தேன் என்பதால் என் மீது பிரதமருக்கு கோபம். பாஜகவின் பாணி ஒரு சர்வாதிகாரம். மக்களின் விருப்பத்திற்கு மாறாக ஜம்மு – காஷ்மீர் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு நிதி கொடுக்காத பாஜகவிற்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்’ என்றார்.