தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் ரஜினி நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியான திரைப்படம் தான் ஜெயிலர். உலகம் முழுவதும் வெளியான இந்த திரைப்படம் ஏழு நாட்களில் மட்டும் சுமார் 400 கோடி ரூபாய் வசூலை தாண்டியுள்ளது. முதல் ஏழு நாட்களில் 400 கோடியை தாண்டிய முதல் தமிழ் படம் என்ற சாதனையை ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் படைத்துள்ளது.

ரஜினியின் கேரியரில் 2.0 திரைப்படத்திற்கு பிறகு ஜெயிலர் திரைப்படம் தான் அதிக வசூல் செய்த திரைப்படம் ஆகும். இன்னும் சில நாட்களில் தமிழ் சினிமாவில் அதிக வசூல் செய்த திரைப்படமான பொன்னியின் செல்வன் பாகம் 1 திரைப்படத்தின் வசூல் சாதனையை ஜெயிலர் திரைப்படம் முறியடிக்கும் எனவும் கூறப்படுகிறது.