தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் அமைப்பு ஊர்வலம் நடத்துவதற்கு அனுமதி வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் அந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியானது. இந்த வழக்கை நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபிக் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது சுற்றுச்சுவருடன் கூடிய மைதானத்தில் ஊர்வலம் நடத்த அனுமதி வழங்கிய தனி நீதிபதியின் உத்தரவை நீதிபதிகள் ரத்து செய்தனர்.

அதன் பிறகு கருத்துரிமை மற்றும் பேச்சுரிமையை தடுக்காத வகையில் தமிழக அரசு செயல்பட வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள் கடுமையான ஒழுங்குடன் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்தை நடத்த அனுமதிக்க வேண்டும் என காவல்துறைக்கு உத்தரவிட்டனர். மேலும் ஆர்எஸ்எஸ் அமைப்பு ஊர்வலத்துக்கு அனுமதி கோரி மீண்டும் விண்ணப்பிக்கலாம் எனவும், சட்டப்படி விண்ணப்பங்களை பரிசீலித்து காவல்துறை முடிவெடுக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.