தமிழகத்தில் மோடி போட்டியிட்டால் எனக்கு ஒரு விடிவு காலம் வரும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் இன்று நிர்வாகி ஒருவரின் திருமண விழாவில் கலந்துகொண்டு பேசிய சீமான், இஸ்லாமியர்கள் எப்போது என்னை நம்ப போகிறார்கள் என்று தெரியவில்லை. ஒருவேளை தமிழ்நாட்டில் மோடி போட்டியிட்டால் எனக்கு ஒரு விடிவு காலம் வரும்.

ஏனென்றால் பிரதமர் மோடி தமிழ்நாட்டில் போட்டியிட்டால் நான் அவரை எதிர்த்துப் போட்டியிடுவேன். அன்று நான் பாஜகவுக்கு கடும் போட்டி அளிக்கிறேன் என்று என்னை நம்புவீர்கள் என்று சீமான் கூறினார். ராமநாதபுரத்தில் மோடி போட்டியிட இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.