சென்னை வண்டலூர் உயிரியல் பூங்கா ஓணம் பண்டிகையை முன்னிட்டு வருகின்ற 29ஆம் தேதி அதாவது நாளை இயங்கும் என்று பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது. வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை உயிரியல் பூங்காவுக்கு விடுமுறை அளிக்கப்படும் நிலையில் நாளை இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காவில் 2400 மிருகங்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இங்கு தினந்தோறும் சராசரியாக 3000 திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வந்து செல்லும் நிலையில் வார இறுதி நாட்களில் சுமார் 10,000 பேர் பூங்காவிற்கு வந்து செல்வதாக பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.