வடமாநிலங்களில் லாரி ஓட்டுநர்கள் போராட்டத்தால் தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு வராது என தமிழ்நாடு பெட்ரோல், டீசல் விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் முரளி தகவல் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டுக்கு சென்னையில் இருந்தே பெட்ரோல், டீசல் விநியோகம் செய்யப்படுவதால் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை என்றும் தெரிவித்துள்ளார். வட மாநிலங்களில் பெட்ரோல், டீசல், பால், மளிகை பொருட்கள் என அத்தியாவசிய பொருட்களுக்கு மக்கள் சிரமத்துக்கு உள்ளாகி வருவது குறிப்பிடத்தக்கது.