கோடை மழை தணிந்து வெப்பநிலை உச்சம் தொட தொடங்கி இருக்கிறது.  தமிழ்நாட்டில் இன்று முதல் மே 21 வரை 3 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 – 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. ஏற்கனவே, வெயில் தாக்கத்தால் பலர் தூக்கத்தை இழந்து, வேதனையுடன் இருக்கும் நிலையில், இந்த எச்சரிக்கையால் பீதியடைந்துள்ளனர்.

இந்நிலையில் தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் கோடை வெப்பத்தை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள CM ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். அதன்படி, ஆலைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு போதுமான ஓய்வு வழங்க வேண்டும் என்றும், 100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு காலையிலேயே பணியை தொடங்கி வெப்ப அலைக்கு முன் பணியை முடிக்க வேண்டும் எனவும் அரசு மருத்துவமனையில் போதுமான அளவு ஓஆர்எஸ் இருப்பு வைக்கவும் அறிவுறுத்தியுள்ளார்.