தமிழகத்தில் கடந்த ஏப்ரல் ஆறாம் தேதி முதல் 20ஆம் தேதி பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு நடந்து முடிந்தது. இந்த தேர்வை மொத்தம் ஒன்பது லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் எழுதினார்கள். இதற்கிடையில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முடிவுகள் கடந்த 8 ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியான நிலையில் இன்று காலை 10 மணிக்கு பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் அனைத்து அரசு மற்றும் சுயநிதி பாலிடெக்னிக் மற்றும் பட்டய கல்லூரிகளில் நாளை முதல் மாணவர் சேர்க்கைகான விண்ணப்பங்கள் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மாணவர்கள் நாளை முதல் விண்ணப்பி க்கலாம்.