காவிரி நதிநீர் உரிமையை மீட்க அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் வரும் 30ஆம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். இது தொடர்பான அறக்கையில், காவிரி நதிநீர் பங்கீட்டில் தமிழகத்திற்கான நீரைத் திறந்துவிட மற்றும் கர்நாடக ஆளும் காங்கிரஸ் அரசைக் கண்டித்தும், தமிழநாட்டின் உரிமைகளை பெற்றுத்தராமல் காலம் தாழ்த்தும் மத்திய பாஜக அரசின் தமிழர் விரோதப் போக்கை கண்டித்தும், தமிழ்நாட்டை ஆளும் திறனற்ற திமுக அரசைக் கண்டித்தம் 30ஆம் தேதி தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளார்.