ஊராட்சிகளின் அந்தந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களுக்கான வரவு செலவு அறிக்கை, மேற்கொள்ளப்பட்ட பணிகள், பணிகளின் முன்னேற்ற நிலை, மத்திய மாநில அரசு திட்டங்களுக்கான பயனாளிகள் தேர்வு, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், நமக்கு நாமே திட்டம், தூய்மை பாரத இயக்கம் உள்ளிட்ட பல திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படும். இந்நிலையில்  மே 1ம் தேதி தமிழகம் முழுவதும் கிராமசபை கூட்டம் நடத்த ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இது குறித்த அறிக்கையில், “கிராமசபை கூட்டம் நடைபெறும் இடத்தை முன்னரே மக்களுக்கு அறிவிக்க வேண்டும். எந்த ஒரு மதச்சார்புள்ள வளாகத்திலும் இந்த கூட்டம் நடைபெறக்கூடாது” என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பை பயன்பாட்டை தவிர்ப்பது குறித்து இந்த கிராம சபை கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது