தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் ஒரு முக்கிய செய்தி குறிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணியிடங்கள் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் நேரடியாக நிரப்பப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். அதன் பிறகு தமிழ்நாடு லிமிடெட்டில் 685 ஓட்டுநர் உடன் நடத்துனர் பணியிடங்கள் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கும்பகோணம்) லிமிடெட்டில் 122 ஓட்டுநர் பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கிறது.

இந்த காலி பணியிடங்கள் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மற்றும் செய்தித்தாள்களில் விளம்பரம் வெளியிட்டு நிரப்ப அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு போக்குவரத்து கழகம் கும்பகோணம் மேலாளர் அவர்களால் ஓட்டுநர் பணிக்கான வட்டார எல்லைக்கு உட்பட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் இருந்து பெறப்படும். இதேபோன்று ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணியிடங்களுக்கு செய்தித்தாள்கள் விளம்பரம் மூலம் விளம்பரம் செய்யப்பட்டு இணைய வழி மூலமாக பெறப்படும். மேலும் இதிலிருந்து தகுதி வாய்ந்த ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.