ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலில் திமுக, அதிமுக, தேமுதிக, நாம் தமிழர் கட்சி மற்றும் சுயேட்சை வேட்பாளர்களும் போட்டியிடுகிறார்கள். இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் மாற்றுத்திறனாளியான மணிகண்டன் என்பவரும் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடுகிறார்.

எம்ஏ ஆங்கில பட்டதாரியான மணிகண்டன் கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பகுதியை  சேர்ந்தவர். இவர் பை சின்னத்தில் போட்டுயிடும் நிலையில், தனியாக வீடு வீடாக சென்று பெண்கள் முதியவர்கள் போன்றவர்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். மேலும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது என மணிகண்டன் கூறியுள்ளார்.