திராவிட மாடல் கொள்கை என்பது காலாவதியானது என்று தமிழ்நாடு ஆளுநர் ரவி சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். இது தொடர்பாக ஆங்கில பத்திரிக்கைக்கு பேட்டி அளித்த ஆளுநர், காலாவதியான கொள்கையை வைத்துக்கொண்டு திராவிட மாடல் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்தக் கொள்கையை மீண்டும் புதுப்பிக்க முயற்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் ஸ்டாலின் நல்ல மனிதர், அவர் மீது மிகுந்த மரியாதை உள்ளது. கள்ளக்குறிச்சி கலவரம், கோவை கார் குண்டுவெடிப்பு, விஏஓ படுகொலை போன்றவை நடக்கும் போது தமிழ்நாடு எப்படி அமைதி பூங்காவாகும் என ஆளுநர் கேள்வி எழுப்பியுள்ளார்.