தமிழ்நாட்டின் ஆம்பூரை சேர்ந்த ஐடி ஊழியருக்கு ஐக்கிய அமீரகத்தின் அதிர்ஷ்ட குலுக்கலில் ஜாக்பாட் அடித்துள்ளது. அதன்படி, அவருக்கு அடுத்த 25 ஆண்டுகளுக்கு மாதம் ரூ5.5 லட்சம் என்ற அதிர்ஷ்ட மழையில் நனையப் போகிறார். ஆம்பூரை சேர்ந்த மகேஷ்குமார் நடராஜன் (49) என்ற ஐடி ஊழியர் அண்மையில் சவுதி அரேபியாவில் எமிரேட்ஸ் ட்ரா என்ற ஜாக்பாட் குலுக்கலில் வெற்றி பெற்றுள்ளார்.

இதில் அவருக்கு அடுத்த 25 ஆண்டுகளுக்கு திர்ஹாம் மதிப்பில் 25 ஆயிரம் இந்திய ரூபாயில் சுமார் ஐந்தரை லட்சம் மாதம் வழங்கப்படும். இந்நிலையில், மகள்களின் கல்வி மற்றும் பிறரது கல்விக்காக தனது பரிசுத் தொகையில் கணிசமாக செலவிடப்போவதாக அவர் தெரிவித்துள்ளார்.