இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த ஏழாம் தேதி தொடங்கி இன்று வரை 17 நாட்களைக் கடந்து போர் நீடித்து வருகிறது. இந்தப் போரில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் ஹமாஸ்க்கு ஈரானும் ஆதரவாக செயல்படுகிறது. இந்நிலையில் ஹிஸ்புல்லா இஸ்ரேலுடன் இருமுனை போரை தொடங்க முயற்சிக்கிறது.

இது குறித்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறுகையில் “தற்போது நடக்கும் இந்த போர் இஸ்ரேலுக்கு வாழ்வா? சாவா? போன்றது. இருமுனைப் போரை ஹிஸ்புல்லா தொடங்க முயற்சித்தால் லெபனான் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு பேரழிவை சந்திக்கும்” என எச்சரித்துள்ளார்