தமிழகத்தில் ஒவ்வொரு பண்டிகை காலங்களிலும் மக்கள் அனைவரும் தங்கள் சொந்த ஊர் சென்று திரும்ப ஏதுவாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். சமீபத்தில் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. இந்நிலையில் பொங்கல் சிறப்பு பேருந்து இயக்குவது தொடர்பாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நாளை ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை வருகின்ற ஜனவரி 15ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனால் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல உள்ளதால் வருகின்ற 13ஆம் தேதி வெள்ளிக்கிழமை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்க தமிழக அரசு போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. இதனை தொடர்ந்து எத்தனை பேருந்துகள் கூடுதலாக இயக்க வேண்டும்,எந்தெந்த வழித்தடங்கள் என்பது உள்ளிட்டவை குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் தலைமையில் நாளை ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது