இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் ஆன்லைன் மோசடி சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. நாள்தோறும் மோசடிகளை நிகழ்த்த புதிய புதிய உத்திகளை மோசடிதாரர்கள் கையாண்டு வருகிறார்கள். இதனால் ஊதியதாரர்கள், வங்கி வாடிக்கையாளர்கள்,இன்சூரன்ஸ் பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் பணத்தை இழந்து ஏமாந்து விடுகின்றனர்.

இந்நிலையில் தமிழகத்தில் செல்போன் செயலி மூலமாக கடன் வாங்கி பிறகு பணம் பெற்ற பெண்களின் படங்களை ஆபாசமாக சித்தரித்து மிரட்டும் செயல் அதிகரித்துள்ளதாக போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இத்தகைய மோசடியில் ஈடுபட்ட கும்பல் ஒன்றை சமீபத்தில் திருப்பூரில் கைது செய்த போலீசார் பொதுமக்கள் அவ்வாறு பாதிக்கப்பட்டால் 1930 என்ற ஃபோன் நம்பரில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என தெரிவித்துள்ளனர். தினந்தோறும் ஆன்லைன் கடன் செயலியில் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் பட்சத்தில் தற்போது இந்த அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.