தமிழகத்தில் ஒப்பந்த செவிலியர்கள் கடந்த ஆறு நாட்களாக நிரந்தர பணி நியமனம் செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட செவிலியர்களின் ஆவணங்களை அதிகாரிகள் சமர்ப்பிக்க உள்ளனர். ஆவணம் சரியாக இருந்தால் அவர்களுக்கு பணி வழங்கப்படும் என்றும் 14 ஆயிரம் ரூபாய் மட்டுமே ஊதியம் பெற்ற நிலையில் தற்போது 4000 ரூபாய் உயர்த்தப்பட்டு மொத்தம் 18 ஆயிரம் ரூபாய் ஊதியமாக வழங்கப்பட உள்ளது எனவும் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்..