இன்று அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதனை ஒட்டி தமிழக மக்கள் அனைவரும் தங்களுடைய வீடுகள், குடியிருப்புகளில் தீபம் ஏற்றி வழிபட வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என் ரவி அழைப்பு கொடுத்துள்ளார். தேசம் இப்போதெல்லாம் ஸ்ரீராமர் பக்தியில் மூழ்கி இருக்கிறது. தமிழ்நாட்டு சகோதர சகோதரிகள் மத்தியில் இதை நானே பார்த்து கொண்டு இருக்கிறேன்.

ஸ்ரீ ராமர் பாரதத்தின் தேசிய அடையாளம். அயோத்தியில் மூலவர் குழந்தை ஸ்ரீராமர் சிலை பிராண பிரதிஷ்டையுடன் தேசம் ஒரு அற்புதமான ஸ்ரீராமர் கோவிலை பெறும். இந்த வரலாற்றுப் பொன்நாளை ஒவ்வொரு வீட்டிலும் விளக்கு ஏற்றி ஒட்டுமொத்த தேசமும் கொண்டாட வேண்டும். தமிழகத்தில் சகோதர, சகோதரிகள் அனைவரும் தங்கள் வீடுகள் மற்றும் குடியிருப்புகள் முன் தீபம் ஏற்றி இந்த நாளை கொண்டாடி வழிபட வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.