தமிழகத்தில் அரசு பேருந்துகளில் பயணம் செய்பவர்களுக்கு ஆயிரம் மாதாந்திர சலுகை கட்டணம் பஸ் பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. அந்த பஸ் பாஸ் வைத்து ஒரு மாதம் முழுவதும் மாநகர பேருந்துகளில் எங்கு வேண்டுமானாலும் பயணம் செய்து கொள்ளலாம். அதாவது ஜனவரி 16 முதல் பிப்ரவரி 15ஆம் தேதி பயணம் செய்யக்கூடிய 1000 மதிப்பிலான பயண அட்டை ஜனவரி 1 முதல் 25ஆம் தேதிக்குள் பெற்றுக்கொள்ள வேண்டும்.

அதேபோல ஜனவரி 11 முதல் பிப்ரவரி 10ஆம் தேதி வரை செல்லுபடியாகும் பயண அட்டையானது ஜனவரி 11ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை அனைத்து மாநகர போக்குவரத்து கழக மாதாந்திர பயண சீட்டு விற்பனை மையங்களில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் தற்போது பொங்கலை ஒட்டி தொடர் விடுமுறை வருகிறது என்பதால் ஜனவரி 22ஆம் தேதி வரை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.