சீமானுடன் மிக நெருக்கமாக அன்பு பாராட்டிய நாம் தமிழர் கட்சியின் மாவட்டச் செயலாளர் புகழேந்தி கட்சியில் இருந்து விலகினார். சென்னை கிழக்கு மாவட்டத்தின் செயலாளராக இருந்துவந்த புகழேந்தி, சீமானின் வார்த்தை மட்டும்தான் அரசியல் என்று நம்பி தொலைத்த நாட்கள் அதிகம் என்று பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார். முக்கிய நிர்வாகியான புகழேந்தி விலகியிருப்பது கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது