ஊட்டி அருகே உள்ள தலைக்குந்தா பகுதியை சேர்ந்த எட்டு வயது சிறுமி அந்த பகுதியில் உள்ள கோவில் திருவிழாவுக்கு சென்று விட்டு வீடு திரும்பிய போது அதே பகுதியை சேர்ந்த 23 வயதான அஜித்குமார் சிறுமியை வீட்டுக்கு அழைத்துச் செல்கிறேன் என்று கூறி காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நிலையில் நீண்ட நேரம் ஆகியும் சிறுமியை காணாததால் பெற்றோர் அக்கம் பக்கத்தில் தேடி உள்ளனர்.

அப்போது மயக்க நிலையில் கிடந்த சிறுமியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இது தொடர்பாக தகவல் அறிந்து விரைந்த போலீசார் சிறுமியிடம் விசாரித்த போது தன்னை அஜித்குமார் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து அஜித்குமார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.