சென்னையில் வருகின்ற ஜனவரி 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் மதுக்கடைகள் செயல்படாது என சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். வடலூர் ராமலிங்க வள்ளலார் நினைவு நாள் ஜனவரி 25, ஜனவரி 26 குடியரசு தினம் கடைபிடிக்கப்படும் நிலையில் இந்த இரண்டு நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் மதுக் கூடங்கள் , கிளப்புகள் மற்றும் ஹோட்டல்களை சார்ந்த மது கூடங்கள் மூட வேண்டும். விதிமுறைகளை மீறி மது விற்பனை செய்யும் சில்லறை விற்பனை கடைகள் மற்றும் மதுக் கூடங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் எச்சரித்துள்ளார்.