திமுக இளைஞரணி மாநாட்டுக்காக சேலத்தில் அமைக்கப்பட்ட அரங்கம் உலகின் மிகப்பெரிய தற்காலிக மாநாட்டு அரங்கம் என்ற unique world records புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. சுமார் 9.50 லட்சம் சதுர அடி பரப்பளவில் 45 நாட்களில் மாநாட்டு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாநாட்டில் சுமார் 5 லட்சத்திற்கும் மேல் கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவருக்கும் கட்சி சார்பில் சைவ மற்றும் அசைவ உணவுகள் வழங்கப்பட்டன.