தமிழக சட்டப்பேரவையில் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. அதில் பேசிய அமைச்சர் சக்கரபாணி,தமிழக முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் தரமான அரிசி வழங்குவதை உறுதி செய்து இருக்கிறோம். இடைத்தரகர்கள் இல்லாமல் குடும்ப அட்டையை ஆன்லைன் மூலமாக பெரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு குடும்ப அட்டைகள் வீடு தேடி வரும் என தெரிவித்துள்ளார்.

ரேஷன் கார்டு காணாமல் போனாலும் அல்லது திருத்தம் செய்ய வேண்டும் என்றாலோ ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆனால் புதுப்பித்த ரேஷன் கார்டை நேரில் சென்று வாங்க வேண்டி இருந்தது. இந்நிலையில் இனி புதுப்பித்த ரேஷன் கார்டை தபால் மூலம் வீட்டிலேயே பெறலாம் எனவும் இதற்கு 45 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.