ஆடி மாதத்தை முன்னிட்டு தமிழகத்தில் பிரசித்தி பெற்ற அம்மன் திருக்கோவில்களுக்கு பக்தர்கள் ஆன்மீக சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள் என்ற இந்து செமையா அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார். இந்த வருடம் ஆடி மாதம் சென்னை, திருச்சி, மதுரை மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களை தலைமையிடமாக கொண்டு சுற்றுலா துறையுடன் ஒருங்கிணைந்து அம்மன் திருக்கோவில்களுக்கு ஆன்மீக சுற்றுலா அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த ஆன்மீக சுற்றுலா பக்தர்களுக்கு மிக குறைந்த கட்டணத்தில் மதிய உணவுடன் செயல்படுத்தப்பட உள்ளது. இதில் பக்தர்களுக்கு கட்டணம் இல்லா சிறப்பு தரிசனமும் கோவில் பிரசாதம் மற்றும் கோவில்கள் பற்றிய விவரங்கள் அடங்கிய கையேடு வழங்கப்படும். இது தொடர்பான கூடுதல் விவரங்களை சுற்றுலாத்துறை இணையதளத்திலும் மற்றும் 044-25333333, 253334444, 1800 4253 1111 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.