தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு என் எம் எம் எஸ் தேர்வு உதவி தொகையை உரிய முறையில் சென்று சேர ஏதுவாக ஆதார் எண்ணெய் வங்கி கணக்குடன் இணைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தேசிய வருவாய் வழி திறன் தேர்வு தேர்ச்சி பெற்ற நடப்பு கல்வி ஆண்டில் கல்வி உதவித்தொகை பெற தகுதி பெற்றவர்களின் விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

என் எம் எம் எஸ் தேர்வில் வெற்றி அடைந்த ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு புதிதாக விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டன. தற்போது பத்து முதல் 12 ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களின் விண்ணப்பங்களும் புதுப்பிக்கப்பட்டது. கல்வி உதவித்தொகை மாணவர்களுக்கு உரிய காலத்தில் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில் மாணவர்களின் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.