பாலிடெக்னிக் மாணவர்கள் தேர்வு கட்டணத்தை இணையதளம் மூலம் செலுத்தும் புதிய நடைமுறையை தொழில்நுட்ப கல்வித்துறை அமல்படுத்தியுள்ளது. வருகின்ற ஏப்ரல் மாதம் முதல் பாலிடெக்னிக் கல்லூரிகளில் ரெகுலர் மாணவர்கள், அரியர் மாணவர்கள் தேர்வு கட்டணத்தை நேரடியாக இணையதளம் மூலமாக செலுத்த வேண்டும்.

இது தொடர்பான விரிவான தகவல் பின்னர் தெரிவிக்கப்படும் என்று தொழில்நுட்ப கல்வி இயக்கக கூடுதல் இயக்குனர் பிரபாகரன் தெரிவித்துள்ளார். மேலும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் பட்டைய படிப்புகளை பயிலும் மாணவர்கள் தேர்வு கட்டணத்தை கல்லூரி அலுவலகத்தில் சென்று செலுத்தும் நடைமுறை தற்போது அமலில் இருப்பது குறிப்பிடத்தக்கது.