தமிழகத்தில் எத்தனை மின் இணைப்பு பெற்றாலும் அனைவருக்கும் தலா 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், இந்த ஆண்டு கோடை காலத்தில் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கவும் மின் உற்பத்தியை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் சுழற்சி முறையில் வழங்கப்படும்.

67 ஆயிரம் பேர் மட்டுமே மின் இணைப்பு என்னுடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லை. மின்வாரியத்தை பொறுத்தவரையில் ஏற்கனவே பெறப்பட்டுள்ள மின் இணைப்புகளில் எவ்வித மாற்றமும் செய்யவில்லை. ஒருவர் எத்தனை மின் இணைப்பு பெற்றாலும் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.