இன்று சுபமுகூர்த்த நாள் என்பதால் தமிழக பதிவுத்துறை அலுவலகங்களில் கூடுதல் டோக்கன் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களில் 100-க்கு பதில் 150 டோக்கன்களும், 2 பேர் உள்ள அலுவலகங்களில் 200-க்கு பதில் 300 டோக்கன்களும் வழங்கப்பட உள்ளது. ஐப்பசி மாதத்தின் முதல் சுபமுகூர்த்த நாள் என்பதால் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுள்ளதாக பதிவுத்துறை   தெரிவித்துள்ளது.