செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மாநாடு எங்கே  நடத்த படவேண்டும் ? என்று கலந்து பேசி,  தலைமை கழக நிர்வாகிகளும்,  மாவட்ட கழக செயலாளர்களும் கலந்து பேசி… வருகின்ற 2024 ஜனவரி 6 ம் தேதி கோவை மாநகரில்  மாநாடு நடத்தபடும் என்ற அறிவிப்பை தெரிவிக்கிறேன் என கூறினார்.

இதை தொடர்ந்து பேசிய என பண்ரூட்டி ராமச்சந்திரன்,  தேர்தல் கூட்டணி பத்தி பேச வேண்டிய அவசியம் ஏதும் இல்லை. தேர்தல் வரும்போது பாத்துப்போம் தெரிவித்தார். இந்தியா, ஆசியா, ஐரோப்பா எல்லாம் எங்களுக்கு பிரச்சனை இல்ல. அது தேர்தல் வரட்டும் அப்பறம் பாப்போம். தேர்தலுக்கு இன்னும் இருக்கு 5,6 மாசம் இருக்கு.

பாஜகவுடன் ஒருவருக்கு ஒருவர் பேசுவது என்ன தப்பா? சாதாரணமா பேசிட்டு இருக்கோம். நீங்களும் நானும் பேசுறது இல்லையா? கூட்டணி குறித்து பாஜக பேசுதுன்னு சொல்லல.  அவுங்க பேசிட்டு இருக்காங்க அவ்ளோதான் என தெரிவித்தார். உடனே அருகில் இருந்து பேசிய ஓபிஎஸ், பாஜகவுடன் தொடர்பில் தொடர்ந்து இருந்து கொண்டிருக்கிறோம் என்றார். அருகில் இருந்த வைத்தியலிங்கம் பேசும் போது, பிஜேபி உடன் நட்பு தொடர்பு இருக்கின்றது என கூற, நட்பு கூட்டணியா மாற வாய்ப்பு இருக்குதா என்ற கேள்விக்கு பதில் அளித்த ஓபிஎஸ்உங்க எண்ணம் பலிக்கனும் என தெரிவித்தார்.