தமிழகத்தில் சுகாதாரத் துறையில் காலியாக உள்ள 1066சுகாதார ஆய்வாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. மாநில முழுவதும் சுமார் 1066 சுகாதார ஆய்வாளர் நிலை 2 பணிஇடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில் இதற்கு மாதம் தோறும் 15,500 முதல் 62 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படும். பத்தாம் வகுப்பில் தமிழ் மொழி பாடம் பிளஸ் டூ வகுப்பில் உயிரியல் அலகு தாவரவியல் அல்லது விலங்கியல் பாடத்தில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது மொபைல் போன் என் மின்னஞ்சல் முகவரியை கட்டாயம் வழங்க வேண்டும். தேர்வு தொடர்பாக அனைத்து தகவல்களும் பதிவு செய்த மொபைல் எண்ணுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். இந்த பணியில் சேர ஜூலை 31ஆம் தேதி வரை www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய 98405 86582 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.