தமிழக காவல்துறையில் ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு அதிரடியான உத்தர வு பிறப்பித்துள்ளது. சிவில் சப்ளை டி.ஜி.பி வன்னிய பெருமாள், ஊர்க்காவல்படை டி.ஜி.பி. ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை வடக்கு சட்டம் ஒழுங்கு இணை ஆணையராக அபிஷேக் தீக்‌ஷித்தும், தென்காசி எஸ்.பி. ஆக சுரேஷ் குமார், கரூர் எஸ்.பி. ஆக பிரபாகர், நீலகிரி எஸ்.பி. ஆக சுந்தர வடிவேல் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் திஷா மிட்டல், டெக்னிக்கல் சர்வீசஸ் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரலாகவும், சிபிசிஐடி கண்காணிப்பாளர் ஜெயக்குமார் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.