தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல், பொறியியல் கல்லூரிகளில் தற்போது நடப்பு கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடந்து வருகின்றது. இந்நிலையில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகவும் கல்லூரிகளில் கல்வி கட்டணம் சீராக இல்லை என்றும் புகாரளித்துள்ளது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து அறிவியல் கலை மற்றும் கல்வியியல் கல்லூரி முதல்வர்களுக்கு கல்லூரி கல்வி இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அதில் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஒரு வருடத்திற்கு 200 ரூபாய் மட்டுமே சேர்க்கை  கட்டணமாக வசூல் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசன் இந்த உத்தரவை அனைத்து கல்லூரிகளிலும் நடைமுறைப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.