தமிழக அரசின் சார்பாக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் விதமாக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக ஒவ்வொரு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது . இதனை தொடர்ந்து தமிழக அரசின் தொழில் முனைவர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் மூலம் சிறப்பு பயிற்சி வழங்கப்படுகிறது .

அதாவது இளைஞர்கள் சொந்தமாக தொழில் தொடங்குவதற்கு வசதியாக சென்னையில் மூன்று நாட்களுக்கு பேக்கரி பொருட்கள் தயாரித்தல் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சி இன்று முதல் மார்ச் 15ஆம் தேதி வரை காலை ஒன்பது முப்பது மணி முதல்ஆறு மணி வரை நடைபெறுகிறது .  இது குறித்த கூடுதல் விவரங்களுக்குwww.editn.in  என்ற வலைதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று தமிழக கூடுதல் தலைமைச் செயலாளர் அறிவித்துள்ளார்.