தமிழகத்தில் நேற்று தீபாவளி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்ட நிலையில் அரசு ஊழியர்களுக்கு சமீபத்தில் அகலவிலைப்படி உயர்வு மற்றும் போனஸ் குறித்த பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. அதிலும் குறிப்பாக அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்பட்ட நிலையில் அந்த தொகை அவர்களுக்கு முழுமையாக சேராமல் பிடித்தம் செய்யப்பட்டது.

இதனால் ஊழியர்களுக்கு அவர்களின் போனஸ் தொகை முழுமையாக சென்று சேர வேண்டும் என மனு கொடுக்கப்பட்ட நிலையில் அதனை விசாரித்த உயர்நீதிமன்றம், ஊழியர்களின் ஒப்புதல் இல்லாமல் போனஸ் தொகையில் பிடித்தம் செய்ததற்கான விளக்கத்தை வழங்க வேண்டும் என்று தமிழக அரசு மற்றும் போக்குவரத்து கழகத்திற்கு பிறப்பித்துள்ளது.