தமிழகத்தில் தற்போது பொது தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இதனையடுத்து விரைவிலேயே 2024-25 ஆம் கல்வி ஆண்டு தொடங்க இருக்கிறது. இதனால் பாடத்திட்ட வடிவமைப்பு, குறிப்பிட்ட நாட்களில் நடத்தி முடித்தல், தேர்வு அட்டவணை, மாணவர்களை தயார் படுத்துதல் போன்ற முக்கிய பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ஆங்கில மொழியை சரளமாக பேச சிறப்பு பயிற்சி, விளையாட்டு திறன்களை ஊக்குவிக்க வகுப்புகள் என முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது .

இம்முறை முதலாம் வகுப்பிலிருந்து மாணவர்களை அதிகமாக சேர்கவும்,மாணவர் சேர்க்கை 4.5 லட்சம் மாற்றவும் பள்ளி கல்வித்துறை திட்டமிட்டு இருக்கிறது .அங்கன்வாடியில் பயிலும் குழந்தைகளை அப்படியே அரசு பள்ளியில் சேர்ப்பதை முழுமூச்சாக கொண்டு பள்ளிக்கல்வித்துறை செயல்பட்டு வருகிறது.