மாநகராட்சி, நகராட்சிகளில் உள்ள 1933 காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ள தமிழக அரசு, விண்ணப்பதாரர்கள் இன்று (பிப்.9) முதல் மார்ச் 12 வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளது. TNMAWS இணையதளம் வாயிலாக வேலைக்கு விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் உதவிப் பொறியாளர், இளநிலை பொறியாளர் பணிக்கான இடங்கள் நிரப்பப்பட உள்ளன.