போலியோ எனப்படும் இளம்பிள்ளை வாத நோயை அறவே ஒழிக்க, பிறந்தது முதல் ஐந்து வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும், போலியோ சொட்டு மருந்து ஆண்டுதோறும், பொது சுகாதாரத்துறை மூலம் வழங்கப்படுகிறது. மார்ச் மூன்றாம் தேதி தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்படும் என சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

மேலும் மொத்தம் 43,000 இடங்களில் 57 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்ட பொது இடங்களில், நடமாடும் வாகனம் மூலம், காலை 7:00 முதல் மாலை, 5:00 மணி வரை சொட்டு மருந்து வழங்க, பொது சுகாதாரத்துறை ஏற்பாடுகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது