டாஸ்மாக் கடைகளில், காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் தமிழகம் முழுவதும் செப்டம்பர் மாதத்திற்குள் அமல்படுத்தப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதிலளித்துள்ளது. அதாவது ஜனவரி மாதத்தில் 5 மாவட்டங்களில் இந்த திட்டமானது அமல்படுத்தப்பட்டது.

இந்த  நிலையில் மே மாதத்தில் மேலும் 5 மாவட்டங்களில் இந்த திட்டம் அமுல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திட்டம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஏப்ரல் 4ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்தது.