தமிழகத்தில் துண்டிக்கப்பட்ட மின் இணைப்பிலிருந்து மின்சாரம் பயன்படுத்தப்படுகின்றதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என்று மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. துண்டிக்கப்பட்ட மின் இணைப்பிலிருந்து மீண்டும் மின்சாரம் பயன்படுத்துவதால் மின் நுகர்வோர் பயன்படுத்தும் குறைபாடு உடைய மீட்டர்கள் மூலம் மின்வாரியத்திற்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது.

இதனை தடுக்க குறைபாடு உடைய மீட்டர்களை கண்டறிந்து உடனே மாற்ற வேண்டும் எனவும் துண்டிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்கு மேலான மின் இணைப்பில் இருந்து மீண்டும் மின்சாரம் பயன்படுத்தப்படுகின்றதா என்று ஆய்வு செய்ய வேண்டும் என்று மின்வாரியம் ஏற்பார்வை பொறியாளர்களுக்கு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அனைத்து மாவட்டங்களிலும் குறைபாடுடைய மீட்டர்களை உடனே மாற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.