சென்னை அயம்பாக்கம் பகுதியில் மர்ம காய்ச்சலுக்கு இரண்டு வயது குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அயம்பாக்கத்தை சேர்ந்த சிவச்சந்திரன் என்பவருக்கு இரண்டு வயதில் யஷ்வதா என்ற மகள் உள்ளார். இவருக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் குழந்தையை மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு குழந்தை சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்தது. மர்ம காய்ச்சலுக்கு இரண்டு வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் டெங்கு மற்றும் மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் பரவாமல் இருக்க அரசு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.