தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு அரசு சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதே சமயம் பொதுத்தேர்வில் மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெற்று உயர்கல்வியை தொடர வேண்டும் என்பதற்காக நான் முதல்வன் திட்டத்தின் மூலம் பல இலவச பயிற்சியையும் அரசு மாணவர்களுக்கு வழங்கி வருகிறது. பொதுவாக அரசு பள்ளி மாணவர்களை விட தனியார் பள்ளி மாணவர்கள் நல்ல மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்ற உயர் கல்வியை தொடர்கின்றனர்.

தனியார் பள்ளி மாணவர்களுக்கு மாதம்தோறும் பாடவாரியாக தேர்வுகள் நடத்தப்படுவதால் மாணவர்களின் மதிப்பெண் அதிகரிப்பதற்கு உதவியாக இருக்கின்றது. அரசு பள்ளிகளில் பருவ தேர்வு, காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளைப் போல ஒவ்வொரு மாதமும் இணை பாட வாரியாக தேர்வுகள் நடத்துவதற்கு ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே மாதந்தோறும் நடைபெறும் தேர்வுகளை சந்திக்கும் விதமாக மாணவர்களை தயார் படுத்துமாறு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது