தமிழகத்தில் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் நாய்க்கடி மற்றும் பாம்பு கடி மருந்து கையிருப்பு உள்ளதை பொதுமக்கள் அனைவரும் அறிந்து கொள்ளும் விதமாக அறிவிப்பு பலகைகள் வைக்க வேண்டும் என அமைச்சர் சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக பேசிய அமைச்சர், சரியான நேரத்தில் பணியில் இல்லாத மருத்துவர்கள் மற்றும் மருந்தாளர்கள், பணியாளர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதற்கு உத்தரவிட்டார்.

மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் நாய் கடி மற்றும் பாம்பு கடி மருந்துகள் கையிருப்பு உள்ளதை பொதுமக்கள் அனைவரும் அறிந்து தேவைக்கேற்ப பயன்படுத்தும் விதமாக அதற்கு உரிய மருந்து இருப்பு தொடர்பான அறிவிப்பு பலகைகளை சுகாதார நிலையங்களில் வைக்க வேண்டும் எனவும் அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.