தமிழகத்தில் அரசு பள்ளிகளில் இடிக்கப்பட வேண்டிய பழுதடைந்த கட்டிடங்களின் விவரங்களை TNSED செயலி மூலமாக பதிவு செய்ய வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதன் அடிப்படையில் பள்ளிகளில் பழுதான மற்றும் இடிக்கப்பட வேண்டிய வகுப்பறைகள் விவரத்தை செயலியில் பதிவு செய்து அதன் தற்போதைய நிலவரத்தை அப்டேட் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.