இந்த உலகம் இயங்குவதற்கு காரணமாக இருப்பவர் சூரிய பகவான். உழவுத் தொழிலுக்கும் உழவர்களுக்கும் மரியாதை செலுத்தும் உழவர் திருநாள் தை முதல் நாளான இன்று. தமிழக மக்கள் பொங்கல் பண்டிகையை இன்று கொண்டாடி வருகின்றனர். பொங்கல் வைக்க நல்ல நேரம் காலை 6 மணி முதல் 7.30 மணி வரை, 9 – 10.30 வரை, மதியம் 12:40 to 1.40 ஆகும். தமிழகத்தின் பல பகுதிகளில் இன்னும் சூரியன் உதிக்கவில்லை. சூரியன் உதயமான பிறகு இயற்கை வழிபாடு செய்து பொங்கல் வைக்கவும்.