தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் பாஜக கூட்டணியின் 39 வேட்பாளர்களும் மக்களவைக்கு செல்வார்கள் என மத்திய அமைச்சரும் பாஜக வேட்பாளருமான எல். முருகன் சூளுரைத்துள்ளார்.

நீலகிரியில் பிரசாரத்தில் ஈடுபட்ட அவர், தமிழகத்தில் பாஜக பிரதான கட்சியாக வளர்ந்துள்ளதாக பெருமிதம் தெரிவித்தார். நீலகிரியில் அதிமுக எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை என்று கூறிய அவர் தமிழகம் முழுவதும் அதிமுக களத்தில் இல்லை என்பது மக்களின் கருத்தாக உள்ளதாகவும் கூறினார்.