100 சதவீதம் வாக்குப்பதிவை உறுதி செய்யும் விதமாக வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி வெள்ளிக்கிழமை அனைத்து தனியார் நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களுக்கும் ஊதியத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும் என தொழிலாளர் நலத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் சனி ஞாயிறு வருவதால் தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை வருகிறது. எனவே விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊர் செல்வோர் இப்போதே பயணத்தை திட்டமிடுங்கள்.